ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமான் - ஈரான் தீவிரம்! அமெரிக்காவின் முட்டுக்கட்டை
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் விரிவுரையாளர் ரொக்சேன் ஃபர்மான்ஃபார்மையன் (Roxane Farmanfarmaian) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிராந்தியக் கட்டுப்பாடு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணையில் பிராந்தியக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஓமானும் ஈரானும், அமெரிக்கா தன் தடைகளை நீக்கி ஒப்பந்தத்தைப் பின்பற்றியவுடன் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என விவரித்துள்ளார்.

மிகப்பெரிய பிரச்சினை வாஷிங்டனுடன் தான் உள்ளது என ஃபர்மான்ஃபார்மையன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என ஈரான் கருதுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுச் சொத்துக்கள்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) குறிப்பிட்டது போல், தற்போது இருநாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் இடைத்தரகர்கள் மூலம் குறிப்புகள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன (Exchange of notes) எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவினால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் நிதியிருப்புகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹோர்முஸ் நீரிணையில் வெளிப்பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடையை (US Naval Embargo) முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |