மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்து சேவை: வெளியானது புதிய நேர அட்டவணை
மட்டக்களப்பு(Batticaloa)- கொழும்பு(Colombo) இடையிலான தொடருந்து சேவை அட்டவணைகளில் மீண்டும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மார்க்கத்திற்கான தொடருந்து சேவைகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் விபத்துக்குள்ளாகி வருவதை தடுக்கும் நோக்கில் கடந்த 7ஆம் திகதி முதல் நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
காட்டு யானைகள் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை கூடுதலான நேரம் இந்தப் பயணத்தின் போது காணப்படுகின்ற விடயங்களையும் பொதுமக்கள் முகங்கொடுத்த சிரமங்களையும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய நேர அட்டவணை
இதனை அடுத்து கிழக்கு மாகாண பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் மட்டக்களப்பு, கொழும்பு இடையிலான தொடருந்து சேவை அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நேர அட்டவணை இன்று(24.03.2025) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், அதிகாலை 01.30 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புலதிசி காலை 09.01மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கொழும்பிலிருந்து மாலை 03.15 இற்கு புறப்படும் புலதிசி இரவு 10.38 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
மீனகயா தொடருந்து
அத்துடன், இரவு 07.40 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் மீனகயா அதிகாலை 04.16 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
இரவு 11.00 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் மீனகயா காலை 06.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
காலை 06.10 இற்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு கொழும்பு சென்றடையும்.
அதேநேரம், காலை 06.05 இற்கு கொழும்பிலிருந்து புறப்படும் உதயதேவி மாலை 03.00 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
மேலும், புலதிசி, மீனகயா தொடருந்துகளில் First class AC(AFC), Third class reserved (TCR) மாத்திரம் booking செய்து கொள்ள முடியும் என்பதுடன்உதயதேவி தொடருந்தில் 2nd class மாத்திரம் booking செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
