மட்டக்களப்பில் பாலர் பாடசாலையை அகற்ற முற்படும் பிரதேச செயலாளரின் பொறுபற்ற செயல்

Sri Lankan Tamils Tamils Sri Lanka Sonnalum Kuttram
By Shalini Balachandran Sep 04, 2025 01:54 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மட்டக்களப்பில் அரச காணியில் இயங்கி வந்த பாலர் பாடசாலையொன்றை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளமை பாரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

மட்டக்களப்பு பனியர் வீதியில் அமைந்துள்ள மட்டு ரோட்டரி கழக கட்டிடத்தில் சமூக சீரழிவு இடம்பெறுவதாகவும் அதை பொதுமக்களுக்கு அசௌரியம் கொடுக்காமல் செயற்படுமாறு அறிவித்துவிட்டு அதற்கு அருகில் இயங்கிவரும் மதர் கெயார் பாலர் பாடசாலையை அங்கிருந்து வெளியேறுமாறு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

ஆகவே அவர், சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கின்றாரா ? மற்றும் பிள்ளைகளின் கல்வியை அழிக்கின்றாரா? என பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மீனை பிடித்து கொடுத்தால் பணப்பரிசு! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

இந்த மீனை பிடித்து கொடுத்தால் பணப்பரிசு! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

கட்டிட குத்தகை

குறித்த வீதிக்கு ஒதுக்கப்பட்ட காணியில் ( (Reservation) கடந்த 2000 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக, அப்போது அரச திணைக்கள தலைவர்கள் இந்த கட்டிடங்களை அமைத்துள்ளனர்.

மட்டக்களப்பில் பாலர் பாடசாலையை அகற்ற முற்படும் பிரதேச செயலாளரின் பொறுபற்ற செயல் | Batticaloa Parents Protest Preschool Eviction

இந்தநிலையில் குறித்த கட்டிடங்களை மாநகரசபை தனக்கு சொந்தமானது என தெரிவித்த நிலையில், அதற்கான கட்டிட குத்தகை பணத்தை ரோட்டரி கழகம் மாநகரசபைக்கு செலுத்தி வந்துள்ளது.

இவ்வாறான நிலையில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அண்மையில் பொறுப்பேற்ற பிறகு இந்த ரோட்டரி கழகம் மற்றும் பாலர் பாடசாலை அமைந்துள்ள காணி அரச காணி என கண்டுபிடித்துள்ளார்.

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி காவல்துறையில் முறைப்பாடு

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி காவல்துறையில் முறைப்பாடு

பாடசாலை கட்டிடம் 

இதையடுத்து, இது மாநகரசபைக்கு சொந்தம் அல்ல பிரதேச செயலகத்துக்கு சொந்தம் எனவே இனிவரும் காலங்களில் அதற்கான குத்தகை பணத்தை பிரதேச செயலகத்துக்கு செலுத்துமாறு ரோட்டரி கழகத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் பாலர் பாடசாலையை அகற்ற முற்படும் பிரதேச செயலாளரின் பொறுபற்ற செயல் | Batticaloa Parents Protest Preschool Eviction

இவ்வாறான நிலையில் அருகில் இயங்கி வரும் பாலர் பாடசாலை காணி தொடர்பில் மட்டக்களப்பு ஆணையாளர் மற்றும் ரோட்டரி கழகம் தலைவருக்கும் இடையே (15.06.2002 மற்றும் 01.03.2006) ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகள் (01.05.2006) முதல் செல்லுபடியற்றதாக தெரிவித்து மட்டக்களப்பு ஆணையாளர் மற்றும் ரோட்டரி கழக தலைவருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மதர் கெயார் பாலர் பாடசாலை கட்டிடம் அமைந்துள்ள காணியும் அரச காணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள்

ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: ஒரு வருடத்திற்கு பின் சிக்கிய கான்ஸ்டபிள்

அசௌகரியங்கள் 

இந்தநிலையில், குறித்த காணியில் இருந்து (15.08.2025) திகதி முன்னர் வெளியேறி கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் கடிதம் மூலம் பாலர் பாடசாலை தலைமை ஆசிரியருக்கு அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பாலர் பாடசாலையை அகற்ற முற்படும் பிரதேச செயலாளரின் பொறுபற்ற செயல் | Batticaloa Parents Protest Preschool Eviction

இவ்வாறான நிலையில் குறித்த ரோட்டரி கழக கட்டிடத்தில் சமூக சீர்கேடு இடம்பெற்று வருவதாகவும் இதனால் தாம் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆகையினால், பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வண்ணம் செயற்படுவது அனைவரது கடமை எனவும் இது தொடர்பாக அவதானம் செலுத்துமாறும் ரோட்டரி கழக தலைவருக்கு பிரதேச செயலாளர் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்கு: நீதிமன்றின் உத்தரவு!

ரவி செனவிரத்னவுக்கு எதிராக வழக்கு: நீதிமன்றின் உத்தரவு!

பாலர் பாடசாலை

இது தொடர்பாக கோட்டைமுனை கிராம உத்தியோகத்தர் மற்றும் போதை பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்களை கண்காணிக்குமாறும் அந்த கடிதத்தில் பிரதியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பாலர் பாடசாலையை அகற்ற முற்படும் பிரதேச செயலாளரின் பொறுபற்ற செயல் | Batticaloa Parents Protest Preschool Eviction

எனவே சமூக சீர்கேடு இடம்பெற்றுவரும் அதாவது மதுபானம் பாவிப்பதற்கான இடமாக இருக்கும், ரோட்டரி கழகத்தை வெளியேற்றாமல் மாணவர்கள் கல்வி கற்று வரும் பாலர் பாடசாலை வெளியேற்றுகிறார் என்றால் அவரது செயல்பாடு சமூக சீர்கேட்டை ஊக்குவிப்பதாக தோன்றுகின்றது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, பிள்ளைகளின் கல்வியை மேம்பாட்டை அழிக்கும் இவரது இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது! தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு பதிலடி

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது! தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு பதிலடி

அரசாங்க அதிபர்

இது தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பாலர் பாடசாலையை அகற்ற முற்படும் பிரதேச செயலாளரின் பொறுபற்ற செயல் | Batticaloa Parents Protest Preschool Eviction

அத்துடன் குறித்த பகுதி மட்டும் அல்லாது ஒல்லாந்தர் கோட்டையில் இருந்து பயனியர் வீதி மற்றும் பார் வீதி ஊடாக சீலாமுனை வரைக்கும் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் முகத்துவாரம் வரை கோட்டையில் இருந்து கடல் தெரியும் வரைக்கும் ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் வீதிக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் சில இடங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் சில பணக்காரர்கள் ஆட்சி அதிகாரங்கள் ஊடாக சட்டவிரோத கட்டிடங்களை கட்டி அரச சொத்தை அபகரித்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் அரச அதிகாரிகள் பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமா? என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். சட்டம் எல்லோருக்கும் சமம் எனில் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரச சொத்தை மோசடியாக அபகரித்த குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லையாம்! இளங்குமரன் சுட்டிக்காட்டு

செம்மணி குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லையாம்! இளங்குமரன் சுட்டிக்காட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025