கொத்து கொத்தான முடி வளர்ச்சிக்கு சிறந்த ஆயுர்வேத எண்ணெய்
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
- வெங்காயம்- 2
- கறிவேப்பிலை- 2
- கொத்து வெந்தயம்- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
- பின் இதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவைக்கவும்.
- அடுத்து இந்த எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு இந்தக் கலவையை ஆறவைக்கவும்.
- இதற்கடுத்து எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.
- இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து மூன்று மணி நேரம் ஊறவிட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
- இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முபை நன்கு நீளமாகவும் மற்றும் அடர்த்தியாகவும் வளரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்