நீர்கொழும்பு கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு கடற்தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர்கள் நேற்று (01.08.2026) மீன்பிடிக்க சென்ற இடத்தில் தான் கடலில் காணாமல் போயுள்ளனர்.
படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தன.
படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி
ஆரம்பத்தில் ஒரு சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மற்றுமொருவரும் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக இலங்கை விமானப்படையின் Bell 412 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக மேலும் பல மீன்பிடிப் படகுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனவே அவற்றுக்கு உதவுவதற்கான மீட்பு நடவடிக்கைகளும் கடற்படை மூலம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |