யாழில் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
Jaffna
Jaffna Teaching Hospital
By Sumithiran
யாழ்ப்பாணம்(jaffna) பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் இருந்து இன்றையதினம் (26) இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலத்தில் உள்ளவர் அந்தப் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்றும், யாசகம் பெறுபவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம்
அவரது வயது 70-75 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். அவரது உறவினர்கள் யாராவது வந்து சடலத்தை இனங்காணுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்