மௌனத்தை கலையுங்கள் கோட்டாபய - விடுக்கப்பட்ட அறிவிப்பு
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிபர் ரணிலின் முயற்சிகளை மீண்டும் கடுமையாக கண்டித்துள்ள அவர் தேசத்தின் நலன்களிற்கு பாதகமான விதத்தில் விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் செயற்பட முயல்வதால் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அமைதியாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் ரணிலை ஏன் தெரிவு செய்தது

2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ச வென்ற ஐந்து வருட பதவிக்காலத்தை பூர்த்தி செய்வதற்காக நாடாளுமன்றம் ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தது என தெரிவித்துள்ள சன்ன ஜெயசுமண பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை பிரதிபலிக்கும் புதிய அரசமைப்பு என்ற வாக்குறுதியின் அடிப்படையில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ச தனது மக்கள் ஆணையை இல்லாமல் செய்வதற்காக பயன்படுத்தப்படும்போது எவ்வாறு மௌனமாக இருக்க முடியும் .
தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

முன்னாள் அதிபர் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் தற்போதைய நிகழ்ச்சி நிரலுக்கு அவர் மறைமுக ஆதரவு என்ற தவறான கருத்தை அது ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள அவர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எவ்வாறு தனது மக்கள் ஆணையை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியும் எனவும் கேள்வியெழுப்பி உள்ளார்.