யாழில் தாய்ப்பால் குடித்த சிசு திடீரென மயக்கம் - பின்னர் நடந்த துயரம்
baby
jaffna
death
jaffna teaching hospital
breastfed
By Sumithiran
பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
வட்டுக்கோட்டை அராலி தெற்கைச் சேர்ந்த சிசு இன்று அதிகாலை 3 மணியளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது. சிசு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. இன்று காலை 5.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி சிசு உயிரிழந்தது" என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.