விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka
By Beulah Sep 11, 2023 12:57 AM GMT
Report

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சுயாதீனமாக இல்லை என மக்கள் மத்தியில் கருத்தாடல் ஒன்று இருந்து வருவதாக நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.எம்.எவ் நிபந்தனைக்கேற்பவே ஊழல் எதிர்ப்பு சட்டம் - சஜித் குற்றச்சாட்டு

ஐ.எம்.எவ் நிபந்தனைக்கேற்பவே ஊழல் எதிர்ப்பு சட்டம் - சஜித் குற்றச்சாட்டு

“15ஆம் திகதியில் இருந்து புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் செயல்வலுப்பெற்ற பின்னர், அரசியலமைப்பு சபையின் அனுமதிக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும்.

பூரண அதிகாரம்

தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏதாவது பிழையான தீர்மானங்களை வழங்கி இருந்தால் அது தொடர்பாக தேடிப்பார்க்கும் பூரண அதிகாரம் புதிய ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.

விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் | Bribery Or Corruption Commission Wijieyadasa Sl

அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 1094இல் ஏற்படுத்தப்பட்ட தற்போதைய இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு 29 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளது.

ஆனால் இலஞ்சம், ஊழல் இந்நாட்டில் இருந்து அகற்றப்படவில்லை. அதனால் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் ஒன்றை அனுமதித்துக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும்.

அது தொடர்பான வர்த்தாமானி அறிவிப்பு இந்த வாரம் வெளிவரும்.

தனியார் துறையின் ஊழல்

அத்துடன் இதுவரை இலஞ்ச, ஊழல் சட்டம் செயற்படுத்தப்பட்டது அரச துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் மாத்திரமாகும். என்றாலும், புதிய சட்டத்தின் மூலம் தனியார் துறையின் ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய முடியும்.

விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் | Bribery Or Corruption Commission Wijieyadasa Sl

பாலியல் இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யவும் முடியுமாகிறது.

சட்டவிராரோதமான முறையில் சம்பாதித்துக்கொண்ட சொத்துக்களை வெளிநாடுகளில் வைப்பிலிட்டிருந்தால் அவற்றை மீள கையகப்படுத்தும் அதிகாரம் இந்த சட்டத்தின் கீழ் இருக்கிறது.

பொது மக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பு 

அதற்காக உலக வங்கியினால் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் காரியாலயத்துக்கு தேவையான அதிகாரங்களை வழங்கி இருக்கிறோம்.

விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் | Bribery Or Corruption Commission Wijieyadasa Sl

மேலும் இலஞ்சம் அல்லது ஊழலை அகற்றுவதற்கு சட்டம் மட்டும் போதுமானதாக இல்லை.

பொது மக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். இந்நாட்டில் இருந்து ஊழலை இல்லாமலாக்கினால் சில அரசியல் கட்சிகளின் இருப்பு இல்லாமல் போகும்.

தற்போதுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்திறமை இன்மையால் அனைத்து அரசியல்வாதிகளும் விமர்சிக்கப்பட்டார்கள்.

தற்போதுள்ள இலஞ்ச ஆணைக்குழு எந்த விடயத்தை செய்தாலும் அதற்கு வழங்கி இருக்கும் சுயாதீனத்தன்மை காரணமாக அதன் நடவடிக்கைகளை தேடிப்பார்க்க முடியாது.

என்றாலும் புதிய சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளின் செயற்திறமை தொடர்பாக 4மாதங்களுக்கு ஒரு தடவை நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிட வேண்டும்.

அத்துடன் தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏதாவது தவறான தீர்மானம் அல்லது தீர்ப்பு வழங்கி இருந்தால் அல்லது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணைகளை வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தால் அது தொடர்பக தேடிப்பார்க்கும் பூரண அதிகாரம் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.

இந்த மாதம் 15ஆம் திகதியில் இருந்து புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் செயல்வலுப்பெற்ற பின்னர், அரசியலமைப்பு சபையின் அனுமதிக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய ஆணையாளர்கள் பணிப்பாளர் நாயகம் அதிபரினால், நியமிக்கப்படுவதுடன் அவர்களை இணைத்துக்கொள்வதற்கான தீர்மானத்தை அரசியலமைப்புச் சபை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024