கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொடூர கொலைச் சம்பவம் - பல உண்மைகளை வெளிப்படுத்திய மனைவி
Death
Investigation
Police
Colombo
By Vasanth
கொழும்பு, டாம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பிலான சந்தேக நபரான தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் அவரது மனைவி பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“ஒரு நாள் தனது பணியிடத்தில் வேலை செய்யும் பெண்கள் வீட்டுக்கு வர விரும்புவதாக கணவர் கேட்டார். அதற்கமைய இரண்டு பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
வீட்டிற்கு வந்த கணவர், அந்த பெண்களுடன் எனது மகளையும் அழைத்துக் கொண்டு பரவியல் ஏரியில் குளிக்க சென்றார்.
இவர்கள் மொனராகலை பெண்கள் என அவர் கூறியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,