தம்பலகாமத்தில் வாகன உதிரிப்பாகக் கடை எரிந்து சேதம்
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Nithusan
தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி-திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாகன உதிரிப்பாகங்கள் கொண்ட கடை தீப்பற்றி எரிந்ததில் முற்றாக சேதமடைந்துள்ளது.
இச் சம்பவம் இன்று (13.08.2023) அதிகாலையே இடம்பெற்றுள்ளது.
குறித்த கடை எரிந்ததில் வாகன டயர் உட்பட பல்வேறு வாகன உதிரிப்பாகங்களும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணை

இச் சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தினர் எரிந்த மாதிரிகளை பெற்றுச் சென்றுள்ளனர்.
இருந்தும், இதுவரையில் குறித்த கடை தீப்பற்றியதற்கான காரணங்கள் எவையும் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி