யாழில் இருந்து பயணித்த பேருந்து கோர விபத்து : 21 பேர் படுகாயம்
புதிய இணைப்பு
சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்து ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, சிலாபம் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
முதலாம் இணைப்பு
சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது, இன்று (04) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்துக்குள்ளான பேருந்து பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
