கடந்த பத்து வருடங்களாக சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - தொழிலதிபர் கைது
கடந்த பத்து வருடங்களாக சிறுமியை துஷ்பிரயோகம் செயது வந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தொழிலதிபரை கடுவல நீதிமன்றில் நிறுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துகிரிய பொலிசில் சிறுமி அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். களுபோவில மருத்துவமனையில் மருத்துவர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி சுமார் பத்து ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுமியும் சந்தேகநபரும் அண்டை வீட்டாராக இருப்பதால் சிறுமியின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறும்போது சிறுமியை பாதுகாப்புக்காக சந்தேக நபரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளது. சந்தேக நபர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார், அந்த திருமணங்களில் இருந்து குழந்தைகள் உள்ளனர். சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து துன்புறுத்தப்படுவதை நிறுத்துமாறு சிறுமி பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.
அத்துருகிரிய பொலிஸ் ஓ.ஐ.சி பஞ்சார,சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் ஓ.ஐ.சி சுனிலக ரூபசிங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.