பொருளாதர நெருக்கடிக்குள்ளான சமூகத்திற்கு கனேடிய அரசு வழங்கும் உதவித்தொகை!
இலங்கை தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்து வருவதோடு, இலங்கை மக்கள் பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பல நாடுகள் நிதி மற்றும் பொருள் உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.
அந்தவகையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனேடிய அரசாங்கமும் நிதியுதவி வழங்கியுள்ளது.
நிதி உதவி
இதனடிப்படையில், கனடா அரசாங்கம் 3 மில்லியன் டொலர் நிதி உதவியை நாட்டிற்கு வழங்கியுள்ளது.
அவசரகால உணவு உதவி, சுகாதாரம், ஊட்டச்சத்து சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் போன்றவை தேவைப்படுபவர்களுக்கு குறித்த நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என்பன விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய குறித்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனடா உறுதியளிப்பு
இதேவேளை, இலங்கையின் உடனடி அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திப்பதற்கும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து பங்களிப்பு வழங்கவும் கனடா உறுதியளித்துள்ளது.