கனடா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர் நபர் - வெளியான பின்னணி
கனடா - அமெரிக்க எல்லையில் கடுமையான குளிரில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர் நபரின் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கின் St-Bernard-de-Lacolle நகரின் மரங்கள் அடர்ந்த பகுதியில் இந்த மாத துவக்கத்தில் 44 வயதான Fritznel Richard என்பவரின் சடலம் மீட்கப்பட்டது.
மாகாண காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையில், அவர் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், கடும் குளிரில் சிக்கி இறந்திருக்கலாம் என கண்டறிந்துள்ளனர்.
உத்தியோகப்பூர்வமற்ற எல்லை
ஹெய்டியை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளரான Fritznel Richard பணி செய்யும் உரிமைக்காக காத்திருந்தார்.
அதேவேளை, அமெரிக்காவில் தமது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கவும், சட்டப்படியான அந்தஸ்தை பெறவும் ஆவலுடன் இருந்தார்.
இந்த நிலையிலேயே உத்தியோகப்பூர்வமற்ற எல்லையில் Fritznel Richard-ன் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.