கொலைக்களமான நீர்கொழும்பு சிறை - வரலாற்றில் அரங்கேறிய முதல் சம்பவம்
இலங்கை வரலாற்றில் சிறைக் கைதிகளின் தாக்குதலின் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதிவாகியுள்ளது.
நேற்று முன் தினமும் நேற்றும் நீர்கொழும்பு சிறைச் சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிறைக்கைதிகள் மட்டு மன்றிச் சிறைச்சாலை உத்தியோத்தர்களும் உயிரிழந்துள்ளனர்.
மோதலின் காரணமாக இதுவரை கொல்லப்பட்ட சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை 7 ஆகும். அத்துடன் 19 கைதிகளும் உயிரிழந்துள்ளனர்.
முழுமையான விரிவான அறிக்கை
அதற்கு மேலதிகமாக 23 சிறை அதிகாரிகளும் 54 கைதிகளும் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிறைச்சாலை வட்டாரங்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு சிறையிலிருந்து சுமார் 700 கைதிகளை அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பரை, அநுராதபுரம், பொலனறுவை மற்றும் குருவிட்ட சிறைகளுக்கு மாற்று வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு விடயதான அமைச்சர் என்ற ரீதியில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் விரிவான அறிக்கையை நாளைய தினத்துக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |