நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வேட்பாளர்
Sri Lanka
Law and Order
Election
By Shalini Balachandran
விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் , ஹொரவ்பொத்தானை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தேகெதிபொத்தான பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என ஹொரவ்பொத்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயக் கடன்
குறித்த வேட்பாளர் 2023 இல் எடுத்த 29,500.00 ரூபாய் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்