இந்தியாவிலிருந்து யாழிற்கு படகில் வந்த கஞ்சா : பதுங்கியிருந்து பிடித்த காவல்துறை
யாழ்ப்பாணத்தில் 368 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவருடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் தப்பி சென்றுள்ள நிலையில் , அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து கேரளா கஞ்சாவை படகில் கடத்தி வருவதாக ஊர்காவற்துறை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , காவல்துறையினர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பதுங்கியிருந்த காவல்துறையினரால் ஒருவர் மடக்கிப்பிடிப்பு
படகில் மூவர் கஞ்சாவை கடத்தி வந்து கரை சேர்க்க முற்பட்ட வேளை, கரையில் பதுங்கியிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்ட வேளை மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் ஒருவரை மடக்கிப் பிடித்ததுடன் , மற்றைய இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஊர்காவற்துறை காவல் நிலையம் மேலதிக விசாரணை
கடத்தி வந்த கஞ்சா பொதிகள் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் , என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் வேலணை பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவித்த காவல்துறையினர் , அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , தப்பியோடிய நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |