ஓர் பாலின சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டாம்: அரசாங்கத்தை விமர்சிக்கும் கர்தினால்!
இலங்கையில் ஓர் பாலின(LGBTQ) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் விமர்சித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கை நாட்டின் கலாச்சாரத்தை அழித்துவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நாட்டில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் நாட்டை ஒரு பாதுகாப்பான மற்றும் அனைவரையும் வரவேற்கும் இடமாக மாற்றுவதற்கான திட்டம் ஒன்றை சுற்றுலாத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
பிரச்சினையின் தீவிரம்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், “தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஆசைகளை நிறைவேற்ற இங்கு வரும் வெளிநாட்டினரால் இலங்கையின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலியாக அனுமதிக்கக்கூடாது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதை அறிந்திருக்கிறாரா என்பது எங்களுக்குத் தெரியாது, எனினும், அவர் பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொள்வார் என நாங்கள் நம்புகிறோம்," என தெரிவித்துள்ளார்.
ஓரினச்சேர்க்கை மனப்பான்மையுடன் பிறந்தவர்களை நாம் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கருணையுடன் நடத்த வேண்டும் எனினும், அத்தகைய மனப்பான்மையுடன் பிறக்காதவர்களை மாற்றும்படி கட்டாயப்படுத்தக்கூடாது," எனவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
