கனடா ஸ்ட்ராங் ஃபண்ட் எனும் தேசிய செல்வ நிதியத்தை அறிவித்தார் மார்க் கார்னி!
கனடாவின் வரலாற்றில் முதல்முறையாக கனடா ஸ்ட்ராங் ஃபண்ட் (Canada Strong Fund) என்ற பெயரில் தேசிய அளவிலான இறையாண்மை செல்வ நிதியத்தை (Sovereign Wealth Fund) உருவாக்கப்போவதாக பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள கனடிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த நிதியம் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு முதலீட்டு வாகனமாகச் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால வளர்ச்சி
ஆரம்ப முதலீடாக 25 பில்லியன் டொலர்களுடன் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளமை கனடாவின் எண்ணெய் உற்பத்தி மாகாணங்களில் வருவாயைப் பெருக்கியுள்ளது.

இந்தச் சாதகமான நிதி நிலையை நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குப் பயன்படுத்த பிரதமர் கார்னி திட்டமிட்டுள்ளார்.
இதனடிப்படையில், உங்களிடம் கூடுதல் பணம் இருந்தால் இந்த நிதியத்தில் நீங்கள் முதலீடு செய்து நாட்டை வலிமையாக்க உதவலாம் எனக் குறிப்பிட்ட அவர், இதனை ஒரு மக்களுக்கான நிதியம் என வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 12 மணி நேரம் முன்