உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் தூது: புடின் மூலமாக வெளியான முக்கிய தகவல்
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் மாஸ்கோவில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுடனான தனது மூலோபாய உறவில் (Strategic relationship) மாஸ்கோ கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பு குறித்து இரு தலைவர்களும் இதன்போது விவாதித்ததாக ரஷ்யாவின் டாஸ் (TASS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள்
வார இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில் ரஷ்யாவின் இந்த நேரடித் தலையீடு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது ஈரானுக்குத் தனது வலுவான ஆதரவை வெளிப்படுத்திய புடின், ஈரானிய மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் எவ்வளவு துணிச்சலுடனும் வீரத்துடனும் போராடுகிறார்கள் என்பதை நாங்கள் காண்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியிடமிருந்து (Mojtaba Khamenei) தமக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மொஜ்தபா காமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், புடின் மூலமாக அவரது செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 11 மணி நேரம் முன்