நாளை முதல் நாடு முழுவதும் மின்வெட்டு! வெளிவந்த விபரம்
இரண்டாம் இணைப்பு
நாளை (24) முதல் நாடு முழுவதும் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நாளை (24) ஒரு மணிநேர மின் விநியோக தடையை ஏற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், நாளை மறுதினம் (25) முதல் 4 கட்டங்களின் கீழ், இரண்டு மணித்தியால மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் அடுத்த வாரமளவில் 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் ரஞ்சன் ஜயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர்,
“நாளை (24) முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டாலும், அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீட்டிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்தச் செயன்முறையை தொடர முடியும்.
அதன் பின்னர் நிச்சயமாக 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.