ஈஸ்டர் தாக்குதல் : நீதி நிலைநிறுத்தப்படும் : நம்பிக்கையில் கத்தோலிக்க திருச்சபை
இலங்கையில் (The Catholic Church in Sri Lanka)உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மை வெளிப்படும் என்று தற்போதும் நம்பிக்கையுடன் இருப்பதாக என்று கொழும்பு தகவல் தொடர்பு குழு மறைமாவட்ட உறுப்பினர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ(Fr. Cyril Gamini Fernando) நேற்று(20)தெரிவித்தார்.
"தற்போதைய அரசாங்கம் இந்த சம்பவம் குறித்து மிகவும் பயனுள்ள விசாரணையை நடத்தி வருவதாக நாங்கள் நம்புகிறோம்.
ஏன் சஹ்ரானை தாக்குதல்களை நடத்த ஆதரித்தனர்
எனவே, சஹ்ரானையும் அவரது குழுவையும் தாக்குதலை நடத்த ஆதரித்தவர்கள் வெளிப்படுத்தப்படுவர் என்று நாங்கள் நம்புகிறோம்.
மற்றவர்கள் ஏன் சஹ்ரானை தாக்குதல்களை நடத்த ஆதரித்தனர், தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்தவர்கள் மற்றும் எச்சரிக்கைகளை புறக்கணித்தவர்களையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என்று அருட்தந்தை பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
"சட்டமா அதிபர் திணைக்களம் போன்று அனைத்து சட்ட அமுலாக்க அமைப்புகளும் இந்தப் பிரச்சினையைக் கையாளும் போது சுயாதீனமான முறையில் செயல்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
