மீண்டும் விசாரணைக்கு வருகிறது மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு!
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மத்திய வங்கி பிணைமுறி பத்திர மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூலை 22 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவின் முன்னிலையில் இன்று(26) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையின் போது, இவ்வழக்கில் தலைமை நீதிபதி அமர்வான விசாரணை அமர்வு முறையாக அமைக்கப்படவில்லை என்று நீதிபதி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
வழக்கு தாக்கல்
அதன்படி, மேலதிக நடவடிக்கைகளுக்காக இவ்வழக்கை ஜூலை 22 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய இலங்கை ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்பெச்சுவல் டிரஷரீஸ் லிமிடெட் மற்றும் அதன் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக, சட்டமா அதிபர் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
2016 மார்ச் மாதம் நடைபெற்ற மத்திய வங்கியின் பிணைமுறி பத்திர ஏலத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மேற்படி வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்