நம்ப வேண்டாம்...! மக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தொடர்பில் வெளியாகும் மோசடி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிய முதலீடுகளுக்கு கணிசமான நிதி வருமானத்தை வங்கி வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி விளம்பரங்களுக்கு எதிராகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஏமாற்று விளம்பரங்கள், பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிய தொகை
அத்தோடு, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் (Nandalal Weerasinghe) படங்களைத் தவறாகப் பயன்படுத்தி இந்த விளம்பரங்கள் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தளங்களில் தோன்றும் இந்த ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள், மத்திய வங்கி ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யும் நபர்களுக்கு பெரிய தொகையை செலுத்துவதாக தவறாகக் தெரிவிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
