ஈரானுடனான போர் : அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பில்லியன் கணக்கான செலவு
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு மோதல் தொடங்கியதிலிருந்து, ஈரான் மீதான போருக்காக அமெரிக்கா சுமார் 37.5 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது என்று, பென்டகனின் மேலதிக நிதி கோரிக்கை மீதான செனட் விசாரணையின் போது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் செவ்வாயன்று சட்டமியற்றுபவர்களிடம் தெரிவித்தார்.
போரின் செலவு குறித்துக் கேட்கப்பட்டபோது, "இன்றைய நிலவரப்படி எங்களிடம் உள்ள மதிப்பீடு 37.5 பில்லியன் டொலர் ஆகும்," என்று ஹெக்ஸெத் கூறினார்.
47 ஆண்டுகளில் இராணுவ ரீதியாக பலவீனமடைந்துள்ள ஈரான்
செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் முன் நடந்த இந்த விசாரணை, ஈரானுக்கு எதிரான போருடன் தொடர்புடைய 67 பில்லியன் டொலர் மேலதிக நிதிக்கான பாதுகாப்புத் துறையின் கோரிக்கையை மையமாகக் கொண்டிருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒருவேளை 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஈரான் இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது என்று ஹெக்ஸெத் தனது உரையின் போது தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து
மேலும், ஆயிரக்கணக்கான ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் இன்னும் எப்படி சுருக்க முடிந்தது என்று கேட்கப்பட்டபோது, அமெரிக்கா 200 முதல் 500 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை "ஈரானின் கண்முன்னேயே" கொண்டு சென்றதாக ஹெக்ஸெத் கூறினார். "நாங்கள் அதை இரகசியமாகச் செய்தோம், ஏனெனில் பகிரங்கமாகச் செய்வதை விட அமைதியாகச் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருந்தது...

நாங்கள் நீண்ட காலமாக அந்தப் பகுதி வழியாகச் செல்லும் போக்குவரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"நாங்கள் ஒரு போர்நிறுத்தம் செய்திருந்தோம், பின்னர் அவர்கள் வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்," என்று அவர் கூறினார்.
ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு உதவி
ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு உதவுகின்றனவா என்ற கேள்விக்கு, ஈரானுக்கும் அந்த இரு நாடுகளுக்கும் இடையே "நிச்சயமாக ஒரு கூட்டணியும், அவ்வாறு செய்வதற்கான முயற்சிகளும்" உள்ளன என்றும், அதைத் தடுப்பதற்கு வோஷிங்டனிடம் "பல வழிகள்" உள்ளன என்றும், அவற்றில் சில "இரகசியமாக வைக்கப்பட வேண்டும்" என்றும் ஹெக்ஸெத் குறிப்பிட்டார்.

ஈரான் செய்யும் சில செயல்களுக்கு ரஷ்யாவும் சீனாவும் வெவ்வேறு மட்டங்களில் துணை நிற்கின்றன என்றும் அவர் கூறினார்.
வான் சக்தியால் மட்டும் ஈரானைத் தோற்கடிக்க முடியுமா என்று கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்னிடம் கேட்கப்பட்டது. "வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வான் சக்திக்கு வரம்புகள் உண்டு, அவற்றை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 10 மணி நேரம் முன்