காவல்துறை மீது இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் குற்றச்சாட்டு
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற சபையின் இரண்டு பிரதிநிதிகளும் கைது செய்யப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் பிக்குகள் குழுவொன்று இன்று (23) பிற்பகல் கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக பிரவேசித்ததால் அங்கு கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
கல்வி அமைச்சு வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்

கல்வி அமைச்சு வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட பிக்குகள் மற்றும் ஏனையவர்கள் மிரிஹான காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஏனையவர்கள் தலங்கம காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பார்ப்பதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் சிலர் இன்று பிற்பகல் தலங்கம காவல்துறைக்கு வந்திருந்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், "இன்னும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது என்ன சட்டம்? இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லை என்றால் கல்வித்துறையிடம் பேசி முடிவெடுக்க வேண்டும்."
வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்து

சட்டத்தரணி நுவான் போபகே, குறிப்பிடுகையில், "கைது செய்யப்பட்டவர்கள் பல காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மாணவர் பிக்குகள் பேருந்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வசந்த முதலிகேயின் உயிருக்கு ஆபத்து. இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தடுத்து வைக்கக்கூடிய நிலையில், அவர்கள் வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதுபாரிய சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்தார்.