விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பிரதமர் மஹிந்தவின் முகப் புத்தகத்தில் நான் டாக் செய்தால் அவரை கைது செய்வீர்களா? சாணக்கியன் பதிலடி

srilanka police arrested
By S P Thas May 04, 2021 06:17 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டாக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் கைதுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அண்மையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது மிகவும் ஒரு கேவலமான செயல்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் போலியான முகநூல் ஒன்றின் ஊடாக அவரது முகநூலில் ஒரு டாக் பதிவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்மையில் முகநூல் மூலமாக ஒருவர் தனது பதிவினை அவரது முகநூலில் பதிவேற்றி டாக் செய்ததன் காரணமாக கைது செய்வது என்பது மிகவும் ஒரு கேவலமான விடயமாக தான் நான் பார்க்கின்றேன். இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சினை நடந்து கொண்டிருக்கின்றது.

நாட்டிலே இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா என்றழைக்கப்படும் பெண்மணியை கூட கண்டுபிடிக்க இயலாத நிலையில் இருக்கும் இலங்கை பொலிஸார், முகநூலில் ஒருவர் ஒருவருக்கு டாக் செய்யப்பட்டதற்காக கைது செய்து விசாரிப்பது என்பது மிகவும் ஒரு கீழ்த்தரமான விடயம்.

இந்த அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக செய்யும் ஒரு வேலைத்திட்டமாக தான் பார்க்க வேண்டியுள்ளது. நான் நாளைய தினம் பிரபாகரனுடைய படத்தை முகநூலில் போட்டு பிரதமரை டாக் செய்தால் பிரதமரை கைது செய்வீர்களா என கேட்க விரும்புகின்றேன். உண்மையில் இது பாரியொரு தமிழ் மக்களை அரசியல் ரீதியாக அடக்குகின்ற செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன். இந்த அரசாங்கம் உடனடியாக இவ்வாறான வேலைத்திட்டங்களை நிறுத்த வேண்டும்.

இன்று கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் தமிழர்களை அடக்க முயற்சி எடுக்க கூடாது என சொல்ல விரும்புகின்றேன். இதை வன்மையாக கண்டிப்பதுடன் அமைச்சருடனும் பேசவுள்ளேன். இவ்வாறு தொடருமானால் பல அமைப்புகள் உருவாகும். இந்த அரசுக்கு எதிராக போராடவும் தயாராக உள்ளோம்.

வட கிழக்கு மட்டும் இல்லாமல் மலையகத்திலும் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தில் கைது செய்தவர்களுக்கும் எந்தவித விசாரணையும் செய்யவில்லை. ஆகவே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020