மயிலிட்டி மக்களின் 37 வருடகால பிரச்சனை : அமைச்சர் சந்திரசேகர் அளித்த உறுதிமொழி

Jaffna Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Sumithiran Jun 25, 2025 01:00 PM GMT
Report

 37 வருடங்களாக தமது சொந்த நிலத்திற்காக போராடி வரும் மயிலிட்டி மக்களின் பிரச்சினை நிச்சயம் தீர்க்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று( 25.06.2025) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

கடற்றொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் ஆராய்வு 

  இதன்போது இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை, சட்டவிரோத முறைகளை பயன்படுத்தி மீன் பிடித்தல், தென்னிலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள், மீன்பிடிக்கான இறங்கு துறைகளை புனரமைத்தல், மயிலிட்டி, பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

மயிலிட்டி மக்களின் 37 வருடகால பிரச்சனை : அமைச்சர் சந்திரசேகர் அளித்த உறுதிமொழி | Chandrashekhar Assurance People Of Mylitti

 இக் கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன், அமைச்சின் மேலதிக செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், காவல்துறையினர், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கடற்றொழிலாளர்களுக்குரிய ஓய்வூதியத் திட்டம் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்று கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பொதுக் கல்வியில் ஏற்படப்போகும் மாற்றம்: கிடைத்தது அமைச்சரவை அனுமதி

பொதுக் கல்வியில் ஏற்படப்போகும் மாற்றம்: கிடைத்தது அமைச்சரவை அனுமதி

 அவர் மேலும் கூறியவை வருமாறு,

மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி 

'மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்யப்போகின்றோம். நவீன திட்டங்களுடன் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன. நெடுந்தீவு பகுதியில் கடலரிப்பு அதிகரித்துள்ளது. அப்பகுதியில் கடல் அணைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மயிலிட்டி மக்களின் 37 வருடகால பிரச்சனை : அமைச்சர் சந்திரசேகர் அளித்த உறுதிமொழி | Chandrashekhar Assurance People Of Mylitti

 கடற்றொழிலாளர்களுக்குரிய ஓய்வூதியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜுலை முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும். இதற்கு கடற்றொழிலாளர்களின் பங்களிப்பு அவசியம். கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே மாவட்டம் தோறும் அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக இக்கூட்டங்கள் நடைபெறும். கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். எமது அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர். எமது பிரதி அமைச்சர்கூட கலந்துகொண்டு வருகின்றார். எனவே, இக்கூட்ட நடைமுறை சிறப்பாக உள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : நாட்டை வந்தடையவுள்ள தொன் கணக்கான உரம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : நாட்டை வந்தடையவுள்ள தொன் கணக்கான உரம்

காணி விடுவிக்கப்படும்

காணி விடுவிக்கப்படும், அது விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 37 வருடங்கள் திறக்கப்படாத வீதிகள்கூட தற்போது திறக்கப்பட்டு வருகின்றன. பாரிய தொழில்பேட்டையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்பேட்டை மற்றும் விமான நிலையத்துக்கு தேவையான காணிகள்தவிர, ஏனையவை நிச்சயம் விடுவிக்கப்படும். மயிலிட்டியை கைவிட்டு சென்ற மக்கள், இன்று போராடிவருகின்றனர். 37 வருடங்களாக அம்மக்களுக்கு உள்ள பிரச்சினை நிச்சயம் தீர்க்கப்படும்." - என்றார்.

மயிலிட்டி மக்களின் 37 வருடகால பிரச்சனை : அமைச்சர் சந்திரசேகர் அளித்த உறுதிமொழி | Chandrashekhar Assurance People Of Mylitti

 இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, எதிர்வரும் காலங்களில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் எழுத்து மூலமாக மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக திட்டமிடல் பணிப்பாளரிடமும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரிடமும் கையளிக்கலாம். அத்தோடு, தடைசெய்யப்பட்ட மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் வைத்து வடபகுதி கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் இது தொடர்பில் கதைத்துள்ளோம். வெகு விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களுக்கு மன்னிப்பு வழங்க கூடாது என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும், அவ்வாறான செயல்களுக்கு அரசியல் தலையீடுகளும் இருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்சிப் பதவிகளைத் துறந்த ரவிகரன் எம்.பி.

கட்சிப் பதவிகளைத் துறந்த ரவிகரன் எம்.பி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025