நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வுசெய்து வெளியிட்ட சந்திரயான்-3
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை என்னவென்பது குறித்து முதல் பரிசோதனைக் குறிப்பை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "விக்ரம் லேண்டரில் உள்ள சேஸ்ட் ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) பேலோடின் முதல் ஆய்வுக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. நிலவின் மேற்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் பணியை சேஸ்ட் செய்கிறது.
இது நிலவின் மணல்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட அளவு துளையிட்டு வெப்பத்தை அறிந்துள்ளது. அதாவது நிலவின் மேல்பரப்பில் உள்ள மணலில் இருந்து 10 செ.மீ ஆழத்துக்கு துளையிட்டு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சென்ரிமீற்றரிலும் வெப்பநிலையை அறியும் வகையில் அதில் 10 வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டிருந்தன.
வெப்பநிலையைக் கண்டறியும் சோதனை

நிலவின் தென் துருவத்தில் இதுபோன்று மணல்பரப்பின் மீது வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுவது இதுவே முதன்முறை. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பகுதிக்கு ‘சிவசக்தி’ என்று பெயரிடப்பட்டது. இந்தப் பகுதியில் ரோவர் வலம்வரும் படங்களின் தொகுப்பை இஸ்ரோ கடந்த சனிக்கிழமை (26) வெளியிட்டது.
அதில் 26 கிலோகிராம் எடை கொண்ட ரோவர், தனது 6 சக்கரங்களால் தென்துருவப் பகுதியில் ரிமோட் கார் போன்று முன்னும், பின்னும் ஊர்ந்துசென்று ஆய்வுப் பணிகளை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (27) நிலவின் மேற்பரப்பில் உள்ள மணலின் வெப்பநிலை பற்றிய பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 27, 2023
Here are the first observations from the ChaSTE payload onboard Vikram Lander.
ChaSTE (Chandra's Surface Thermophysical Experiment) measures the temperature profile of the lunar topsoil around the pole, to understand the thermal behaviour of the moon's… pic.twitter.com/VZ1cjWHTnd