குமார் பொன்னம்பலத்தின் படுகொலையை முன்கூட்டியே அறிந்த சந்திரிக்கா!
குமார் பொண்ணம்பலத்தின் படுகொலையை முன்னாள் ஜனாதிபதி முன்னதாகவே அறிந்திருந்திருந்ததாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செம்மணி முகாம் தொடக்கம் துண்டி முகாம் வரை என்ற படுகொலைகள் மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய வாக்குமூலங்கள் தொடர்பில் பல விடயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, “1999 ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலத்தை போகம்பரை சிறைச்சாலையில் சந்தித்தபோது கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு தான் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை அவரிடம் கூறினேன்.
ஐக்கிய நாடுகள் சபை
அப்போது அவர் என்னிடம் 'பயப்படாமல் இருங்கள். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று உங்களை விடுத்து செம்மணி வழக்கின் சாட்சியாளராக மாற்றுகிறேன்' எனக் குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டு இந்த செம்மணி மனிதப்புதைகுழியைக் காண்பிப்பதற்காகச் சென்றபோது எனது சார்பில் முன்னிலையாவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதருவதற்கு குமார் பொன்னம்பலத்துக்கு விமானவசதி வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் அவர் திடீரெனப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவை அடுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட இரங்கல் செய்தியில், குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்னைய தினத்துக்குரிய திகதியே இடப்பட்டிருந்தது.
இவ்விடயம் அவ்வேளையில் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதன்மூலம் குமார் பொன்னம்பலம் கொல்லப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி அந்த இரங்கல் செய்தியை எழுதியிருந்தார் என்பது தெளிவாகிறது.
சந்திரிக்காவும் அறிந்திருந்தனர்
1999 ஆம் ஆண்டு நான் மனிதப்புதைகுழிகள் உள்ள இடங்களைக் காட்டிக்கொடுத்த வேளையில், அவற்றைக் காட்டிக்கொடுக்கவேண்டாம் எனவும், ஜனாதிபதி எனக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதன் காரணமாக சிலவற்றை மாத்திரம் காட்டிக்கொடுத்ததன் .
பின்னர், அதனைக் கைவிட்டுவிட்டேன். இவ்விடயம் தொடர்பில் மேலதிகமாக பல விடயங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா வரை அறிந்திருந்தனர் என்பதை நான் யாழ் மக்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன்.
அரியாலை 7 ஆவது இலங்கை இராணுவக் காலாட்படையினால் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சி3 முகாமின் 7 ஆவது இராணுவக் காலாட்படைக்கு உரிய சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டம் என அறியப்படும் பிரதேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டன” என்றார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 14 நிமிடங்கள் முன்
