போதைப்பொருள் கடத்தல்காரரின் பிறந்தநாள் விருந்து கொழும்பில்! புலனாய்வு விசாரணையில் அம்பலம்
வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரான வனாத்தே “பரை சுதா” என்பவர் தனது பிறந்தநாளுக்காக கொழும்பில் உள்ள ஒரு களியாட்ட விடுதியில் ஏற்பாடு செய்த விருந்துக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை அழைத்துள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருந்துக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த விருந்து போதைப்பொருள் கடத்தல்காரரின் நிதி பங்களிப்பில் நடத்தப்படும் ஒரு அறக்கட்டளையின் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரே மாதிரியான ஆடைகள்
கொழும்பில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து இந்த விருந்துக்கு வந்துள்ளனர். பெண்களுக்கு முன்கூட்டியே புடவைகள் வழங்கப்பட்டதாகவும், ஆண்களுக்கும் உடைகள் வழங்கப்பட்டதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருந்து கடந்த வார இறுதியில் இரவில் நடைபெற்றுள்ளது.
போதைப்பொருள் மூலம் சம்பாதித்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் உள்ள வலையமைப்பை இப்போது புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பரை சுத்தா' வெளிநாட்டிலிருந்து வீடியோ அழைப்பு மூலம் நேரடியாக இந்த விருந்துக்கு இணைக்கப்பட்டதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 45 நிமிடங்கள் முன்
