செம்மணி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட கைவளையல்
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன.
இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 48ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்பட்டும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி