செம்மணியில் இன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள்
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது.
அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 10 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
540 எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழான அகழ்வு பணிகளின் போது, 552 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 540 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி