செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி, இந்த அகழ்வுப் பணிகள் இன்று (27.04.2026) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அகழ்வுப் பணிக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
அகழ்வுப் பணிகள்
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் 240 மனித என்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றுள் 239 மனித என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு, செப்டெம்பர் 06 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றிருந்தது.
இந்தநிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் சுமார் 08 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்