ஞானசாரதேரருக்கு வெசாக்கில் விடுதலை : ரணிலிடம் கோரும் பௌத்த பீடங்கள்
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Ven. Gnanasara Thera) தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கிணங்க,வெசாக் போயா தினத்தில் அவருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாயா, அமரபுர மகா சங்க சபை ஆகிய பீடாதிபதிகள் அதிபர் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிபர் ரணிலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதம பீடாதிபதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
நான்கு வருட சிறைத்தண்டனை
2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான ஊடக விவாதத்தின் போது முரண்பாட்டை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சமூகத்தில் இடம்பெறும் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளை எச்சரிக்க ஞானசார தேரர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
படைகளுக்கு முக்கியமான ஆதரவை வழங்கி
அவரது நடவடிக்கைகள் அரச பாதுகாப்புப் படைகளுக்கு முக்கியமான ஆதரவை வழங்கியது, இலங்கையில் சில தீவிரவாதக் குழுக்கள் பரவுவதைத் தடுக்க உதவியது.

இதன் விளைவாக, இலங்கை சமூகத்தில் பல சாத்தியமான தீவிரவாத மோதல்கள் தவிர்க்கப்பட்டதாக அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |