மத்திய கிழக்கில் தொடரும் அதிரடி தாக்குதல்கள்: குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
மத்திய கிழக்கில், இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் (Hamas) இடையிலான போரில் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக யுனிசெப் (United Nations International Children's Emergency Fund) அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் யுனிசெப் நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் கேத்தரீன் ரூசெல் தெரிவித்துள்ளதாவது, “சமீபத்தில் முடிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் மீண்டும் ஆங்காங்கே இரு தரப்பினரும் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
காசா பகுதியில் கடந்த 10 நாட்களில் 322 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 609 பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹமாஸின் தாக்குதல்
அத்துடன், பல குழந்தைகள் ஆதரவற்று தங்குவதற்கு இடமின்றி தவிப்பதுடன் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் , மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023ஆம் ஆண்டு ஒக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.
இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேரை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.
இஸ்ரேலின் பதிலடி
இதையடுத்து, அதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
