ஈரான் உச்ச தலைவருக்கு மொஸ்கோவில் சிகிச்சை! ரஷ்யா வழங்கிய பதில்
ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி ரஷ்யாவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவலை ஈரான் அதிகாரிகள் மறுத்துள்ளதுடன், ரஷ்யாவுக்கான ஈரான் தூதரான காசெம் ஜலாலி, இந்த தகவல்கள் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்கள், அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த கமேனி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் மொஸ்கோவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டன.
ரஷ்யாவின் பதில்
அதன்போது, அவர் ரஷ்ய இராணுவ விமானத்தில் அவர் மொஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தகவல்களை ரஷ்ய அரசு உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை. க்ரெம்லின் பேச்சாளரான டிமிட்ரி பெஸ்கோவ், “இத்தகைய தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்கமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் ஏற்பட்ட காயம்
ஈரான் வெளியுறவு அமைச்சகம், மொஜ்தபா கமேனி தாக்குதலில் காயமடைந்தாலும் தற்போது நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

வெளியான சில ஒலிப்பதிவுகளின் படி, தாக்குதல் நடந்த நேரத்தில் அவர் வெளியே சென்றிருந்ததால் உயிர் தப்பியதாகவும், சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய குறித்த தாக்குதலில், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அதில், அவரது மனைவி மற்றும் மகனும் அடங்குவதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |