முக்கிய அரச நிறுவனம் ஒன்றில் காணப்படும் அதிகாரிகள் பற்றாக்குறை
தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை பணியாளர்களில் சுமார் முந்நூறு அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது.
தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் அறுநூறு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றபோதிலும், அவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர்.
முக்கிய அதிகாரிகளுக்கான பற்றாக்குறை
அதன்படி, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையில் நிர்வாக அதிகாரிகள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள், மாவட்ட உளவியல் அதிகாரிகள், கணக்கு உதவி அதிகாரிகள் மற்றும் உதவி ஆலோசகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள்உள்ளன.

நாட்டில் சிறுவர்கள் மீதான வன்முறையைத் தடுப்பது, சிறுவர்களை பாதுகாப்பது, அனைத்து வகையான சிறுவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துவது ஆகியவை தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் பணியாகும்.
இந்த ஊழியர் பற்றாக்குறையின் காரணமாக,சிறுவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்