யாழில் இடம்பெற்ற அனர்த்தம் தீயில் எரிந்து நாசமாகிய சிறுவர் ஆற்றல் மையம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த "தபோவனத்தின்" பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பல பெறுமதி மிக்க நூல்களும் தளபாடங்களும் எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியர் தயா சோமசுந்தரம் அவர்களால் பிரதேச சிறுவர்களின் நலன் கருதி குறித்த நிறுவனம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முன்பள்ளிமுதல் சாதாரணதரம் வரை மாணவர்கள் கல்வி செயற்பாடு
இதில் முன்பள்ளி சிறுவர்கள் முதல் தரம் 11 வரையான 90 க்கும் அதிகமான மாணவர்கள் கற்றல் விளையாட்டு மற்றும் இதர செயற்பாடுகளை கற்றுவரும் ஒரு நிலையமாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த நிலையம் எரியுண்டதால் கற்கும் மாணவர்களுடன் அப்பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |