சீனாவில் பாலத்தின்மீது மோதி விமானம் விபத்து
சீனாவின் ஷாங்காய் ஹாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில், இன்று சனிக்கிழமை(02) சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாகவும், "ஒழுங்கான முறையில்" விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், விமான நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இயந்திரக் கோளாறால் ஏற்பட்ட விபத்து
சனிக்கிழமை நண்பகல் அளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், விமானம் நிறுத்துமிடத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது "இயந்திரக் கோளாறு" ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.

விமானப் பணியாளர்கள் உடனடியாக நடைமுறைகளைப் பின்பற்றினர், இறுதியில் விமானம் ஜெட் பாலத்தின் மீது "பகுதியளவு மோதியது" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்திற்கான குறிப்பிட்ட காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |