சீனாவால் இலங்கைக்கு மற்றுமொரு இலவச திட்டம்
ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு இலவசமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் சீனத் தூதுவரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த அரிசித் தொகை இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.
இது குறித்து சீனத் தூதுவர் தமக்கு அறிவித்துள்ளதாக நேற்றிரவு (18) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுகுறித்த கோரிக்கை கடிதத்தை சீனத் தூதுவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, வெளிவிவகார அமைச்சு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி உச்சத்தை தொட்டிருப்பதுடன், நாட்டில், பொருட்களின் தட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பெரும் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி, உரம் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து கடந்தாண்டு நெல் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்ததுடன், அடுத்துவரும் நாட்களில் அரசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே சீனா தக்க தருணத்தில் இலங்கைக்கு கைகொடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.