இந்தியாவைத் தாக்கவுள்ள சீனாவின் விண்கலன் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
சீனா விண்ணில் ஏவியுள்ள விண்கலன் இந்தியாவைத் தாக்கும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா விண்ணுக்கு அனுப்பிய லாங் மார்ச் 5 பி விண்கலனின் பாகங்கள் பூமிக்கு அருகே சுற்றித் திரிவதாக அமெரிக்கா நிதி உதவி அளிக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே சீனா அனுப்பிய விண்கலனின் விண்வெளி குப்பைகள் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து இந்தியாவை தாக்க உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
விண்வெளி குப்பைகளால் ஆபத்து
மேலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வளிமண்டலத்திற்குள் விண்கலனின் பாகங்கள் நுழைந்து அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கலாம் என ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விண்கலன் 21 டன் எடையுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்ணுக்கு ஏவப்பட்டு, டியாங்காங் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது.