பாகிஸ்தானின் PRSC-EO3 செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்திய சீனா
வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தாய்வான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து, பாகிஸ்தானின் தொலை உணர்வு செயற்கைக்கோள் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
PRSC-EO3 எனப் பெயரிடப்பட்ட அந்தச் செயற்கைக்கோள், இரவு 8.15 மணிக்கு (1215GMT) லாங் மார்ச்-6 ஏவுகணை மூலம் விண்வெளியில் ஏவப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, அது தனது திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Long March Rocket திட்டம்
இந்த ஏவுதல், சீனாவின் விரிவடைந்து வரும் விண்வெளித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமான Long March Rocket தொடரின் 640வது பயணமாகும்.

PRSC-EO3 திட்டமானது, இயற்கை வளங்களைக் கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் உள்ளிட்ட புவி கண்காணிப்புத் துறைகளில் பாகிஸ்தானின் திறன்களுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தான் விண்வெளி மற்றும் உயர் வளிமண்டல ஆராய்ச்சி ஆணையம் (SUPARCO), உள்நாட்டில் ஏவப்பட்ட EO-3 செயற்கைக்கோளின் ஏவுதலை, பாகிஸ்தானின் தொழில்நுட்பத் தன்னிறைவுப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என விவரித்ததுடன், இது நகர்ப்புறத் திட்டமிடல், பேரிடர் மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றில் திறன்களை மேம்படுத்தும் என்றும் குறிப்பிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்