தாக்குதல் அச்சம் : அறிக்கைகள் மூலம் உத்தரவிடும் மொஜ்தபா கமேனி
அமெரிக்கா தாக்குதல் நடத்திவடும் என்ற அச்சத்தில் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி, இரகசிய இடத்தில் இருந்தபடி அறிக்கையின் மூலமே உத்தரவுகளை பிறப்பிப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த பெப்ரவரி 28 அன்று ஆயதுல்லா அலி கமேனியைக் கொல்வதற்காக அமெரிக்கா நடத்திய தாக்குதலில், மகன் ஆயதுல்லா மொஜ்தபாவும் பலத்த காயமடைந்ததாகவும், அவர் ஒரு காலை இழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன. ஆனால், இது தொடர்பாக ஈரான் உறுதியான தகவலை ஏதும் வெளியிடவில்லை.
இரகசிய இடத்தில் இருந்து கொண்டு, அறிக்கையின் மூலமே உத்தரவு
இந்த நிலையில், ஈரான் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி, இரகசிய இடத்தில் இருந்து கொண்டு, அறிக்கையின் மூலமே உத்தரவுகளை வெளியிடுவதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில்;

தனது முதல் உரையில் பலவீனமானவராகத் தோன்றிவிடக் கூடாது என்பதற்காக மொஜ்தபா மிகவும் கவனமாக இருக்கிறார். ஆட்சியாளரை சுற்றியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளன.
சந்திப்பை தவிர்க்கும் உயர்மட்ட அதிகாரிகள்
மொஜ்தபா கமேனியின் இருப்பிடத்தை அறிந்து இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தும் என்பதற்காக, ஈரான் புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதிகள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் அவரைச் சந்திப்பதைத் தவிர்க்கின்றனர்.

இதன் காரணமாக, நம்பத் தகுந்த நபர்கள் மூலம் கைகளால் எழுதப்பட்ட கடிதங்களே பரிமாறப்பட்டு வருகிறது, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்