ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு இணங்க வேண்டாம்! அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு இணங்கவோ அல்லது அவற்றை நடைமுறைப்படுத்த கூடாது என சீனாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஈரானின் உயர்மட்ட தூதரின் சீன பயணத்திற்கு முன்னதாக, குறித்த அறிப்பு வெளியாகியுள்ளது.
வெளிநாட்டுச் சட்டங்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு எதிராக சீன நலன்களைப் பாதுகாக்கும் 2021 ஆம் ஆண்டு சட்டத்தை, அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் முதல் முறையாகப் பயன்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நீண்ட அதிகார வரம்பு
இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் நீண்ட அதிகார வரம்பை துல்லியமாக எதிர்கொள்வதற்காக, சட்டத்தின் ஆட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் கூறியுள்ளன.

ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து கொள்முதல் செய்து வரும், சீனாவில் உள்ள 'eapot Independent' சுத்திகரிப்பு ஆலைகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு எதிராக கருவூலத் துறை அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
அது அத்தகைய ஐந்து சுத்திகரிப்பு ஆலைகள் மீது தடைகளை விதித்துள்ளது.
இதன்படி ஏப்ரல் மாத இறுதியில் விதிக்கப்பட்ட சமீபத்திய தடையானது, பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ள ஈரானின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒன்றான ஹெங்லி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தை இலக்காகக் கொண்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |