இலங்கையின் நெருக்கடி - சீனா வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
China
By Sumithiran
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், அதன் கடன் சுமையை குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு, தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு சீனா தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சீனா உன்னிப்பாக அவதானம்
நட்பு நாடு என்ற வகையில், இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், முடிந்த போதெல்லாம், இலங்கையின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தினசரி செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
