இஸ்ரேல் ஈரான் பதற்றம் : இடையில் புகுந்த சீனா
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருவதால், பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு சீனா மீண்டும் இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இன்று(16) இருநாடுகளுக்கும் விடுத்த அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு
"பதற்றங்களைத் தணிக்கவும், பிராந்தியம் பெரிய கொந்தளிப்பில் சிக்குவதைத் தடுக்கவும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சரியான பாதைக்குத் திரும்புவதற்கான நிலைமைகளை உருவாக்கவும் அனைத்து தரப்பினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மற்றொரு செய்தித் தொடர்பாளர் "இந்தச் செயல்பாட்டில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கத் தயாராக உள்ளது" என்று கூறியதைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரது கருத்துக்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
