இலங்கை வந்தடைந்த சீன அரிசி கப்பல்
சீனாவில் இருந்து 500 மில்லியன் யுவான் பெறுமதியான இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் இது தொடர்பான தகவல்களை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, முதலாவது அரிசி தொகுதி கடந்த 16 ஆம் திகதியும் இரண்டாவது தொகுதி 19 ஆம் திகதி கொழும்பை அடைந்துள்ளது.
இந்நிலையில் 500 மில்லியன் யுவான் பெறுமதியான இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ், 7,900 பாடசாலைகளில், 1.1 மில்லியன் சிறுவர்களுக்காக 3 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது என்று சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
Two batches of 500 MTs rice under ??500 million RMB emergency humanitarian assistance arrived in Colombo on 16th & 19th July. So far, 3,000 MTs of rice has been handed over to ?? MoE for 1.1 million children in 7,900 schools across the island under the School Meal Program. pic.twitter.com/lK8h5xHrK7
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) July 21, 2022