இலங்கை எல்லையில் சீன ஆய்வுக்கப்பல்! மாலுமியால் பரபரப்பு !
சிலருக்கு வரும் திடீர் சுகயீனங்கள் சில வேளைகளில் சில கமுக்கங்களை அம்பலப்படுத்திவிடும் இது ஏதோ கடந்தவருடம் ரணில் விக்ரமசிங்கவுக்கு தடுப்புக்காவலில் வந்த திடீர் சுகயீனம் அல்லது சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வுத்தலை சுரேஸ் சலேக்கும் உள்ளே இருக்கும் போது வந்த திடீர் சுகயீனங்களை மையப்படுத்திய கதை அல்ல.
மாறாக இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் கமுக்கமாக நிற்கும் சீன ஆய்வுக்கப்பலான ஷி யான் 6, இல் ஒரு மாலுமிக்கு வந்த திடீர் சுகயீனத்தால் அவரை காப்பாற்ற போன சிறிலங்கா கடற்படை நகர்வுகளின் பின்னார் வந்திருக்கும் புதிய கதை இது.
2023 இல் இதே கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றபோது அது இந்திய பெரியண்ணரை எரிச்சல் ஊட்டிய நிலையில் இப்போது அதே கப்பல் இலங்கை எல்லைக்குள் நுழைய இதுவரை அனுமதி கோரவும் இல்லை.
அவ்வாறு கோரினாலும் அதனை தாம் வழங்கப்போவது இல்லையென தெரிவித்து அநுர அரசாங்கம் இந்தியாவை சாந்தப்படுத்தி எரிபொருள் காரியம் சாதிக்கத்தலைப்படும் நிலையில் இந்த விடயம் உட்பட்ட உள்ளூர் மற்றும் உலக நிலவரங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |